Thursday, September 12, 2013

தப்லீக் ஜமாஅத் : கலிமாவுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்

அகீதா   
  
   லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்துக்கு அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறுயாரும் இல்லை என்று தமிழில் கருத்துக் கூறலாம். மக்கத்து காபிர்கள் சூரியன், சந்திரன், கல், மனிதர்கள் போன்றவற்றையெல்லாம் கடவுளாக ஏற்றிருந்தனர். உண்மையில் இவைகள் கடவுளல்ல. கடவுள் தன்மைக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமேஅல்லாஹ்வின் படைப்புக்கள் கடவுள்களாக வணங்கப்பட்டாலும் அவை வணங்கத் தகுதியானவைகளல்ல. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்பதையே இக்கலிமா நமக்குணர்த்துகின்றது.

Sunday, September 1, 2013

பிரிவினை வாதிகள் யார்? போலி ஒற்றுமை கோஷதுக்கான பதில்

       

 "ஊரூராய் போனார்கள் உம்மத்தை இரண்டாக்கி விட்டார்கள்" என்று நம்மை குறை சொல்கிறார்கள். தவ்ஹீத் சகோதர்கள் யாரும் எங்கேயும் இன்னொருவரிடம் தமது கருத்துக்களைத் திணிக்கவில்லை. யாருக்கும் தமது கருத்தை பின்பற்றும் உரிமையுண்டு தமது கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள், இதனால் அவர்கள் அடிக்கபடுகிரார்கள், இங்கு தவறு எத்தரபால் ஏற்படுகின்றது என்பதை யாரும் தெரிந்து கொள்வர். இதை வைத்து தான் நம்மை "குழப்பவாதிகள்" என்று இவர்கள் கூறுகின்றனர்.