"வணக்கத்திற்குரிய நாயகனை வணங்குவது எப்படி?" என்ற தலைப்பில் இலங்கை ஜமாத்தே இஸ்லாம் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஒரு உரையாற்றினார்கள். அந்த உரையில் அவர் சொல்லவந்த பிரதான கருத்து "கட்டுபடுதல் என்றாலே வணக்கம்" என்பதை தான். இந்த கருத்து முதலில் சொன்னவர் ஜமாத்தே இஸ்லாமியின் இஸ்தாபகர் அபுல் அ'லா மௌலான மௌதூதி அவர்கள் தான்.
Tuesday, October 15, 2013
கட்டுபடுதல் என்பதே வணக்கமா? : ஜமாத்தே இஸ்லாமியின் பிழையான அடிப்படை
"வணக்கத்திற்குரிய நாயகனை வணங்குவது எப்படி?" என்ற தலைப்பில் இலங்கை ஜமாத்தே இஸ்லாம் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஒரு உரையாற்றினார்கள். அந்த உரையில் அவர் சொல்லவந்த பிரதான கருத்து "கட்டுபடுதல் என்றாலே வணக்கம்" என்பதை தான். இந்த கருத்து முதலில் சொன்னவர் ஜமாத்தே இஸ்லாமியின் இஸ்தாபகர் அபுல் அ'லா மௌலான மௌதூதி அவர்கள் தான்.
Saturday, October 12, 2013
யார் இந்த ஷீஆக்கள்?
அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீஆஇஸ்மாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள் பின்னர் தமது அரசியல் சிந்தனைக்குளுக்கெல்லாம் மதச் சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகி சென்றுவிட்டனர்.
நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஆட்சி தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷீஆக்கள் தமது தவறான சிந்தனைகளை எல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்
Friday, October 11, 2013
சூபித்துவதிற்கு ஆதாராம் தேடும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி
சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் இலங்கையிலும் இந்தியாவிலும் இன்னும் உலகில் பல பாகங்களில் இயங்கிவரும் சூபித்துவ தரீகா இயக்கத்தின் முக்கியமான அறிஞர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி. தௌஹீத் பிரச்சாரம் ஆரம்பித்ததும் மக்கள் சத்தியத்தை புரிந்து இவர்களுடைய இயக்கத்தை விட்டும் விலகிவர ஆரம்பித்தார்கள். ஏனெனில் தௌஹீத் வாதிகள் எதை சொன்னாலும் குர்'ஆணிலும் ஹதீஸ்களிலும் இருந்து ஆதாரம் காட்டுவார்கள். இதை பார்த்து விட்டு இவர்களும் குர்'ஆஅனையும் ஹதீஸ்களையும் ஆதாரம் காட்டுறோம் எண்டு சொல்லி குர்'ஆணையும் ஹதீஸையும் வளைத்து வேறு விளக்கம் சொல்லி, அல்லது அரை குறையாக மக்கள் முன்னாள் எடுத்து காட்டி சமாளித்து கொண்டிருக்கிறார்கள்.
Saturday, October 5, 2013
தப்லீக் ஜமாத்தின் 6 Number
தப்லீக் ஜமாத்தின் அடிப்படை அம்சங்களில் அவர்கள் ஆறு விடையங்களை அமைத்திருக்கின்றார்கள். இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க அம்சங்களுக்கு விரிவுறையோ விளக்கமோ அவர்களது த'லீம் நூல்களிலிருந்து மாத்திரம் தான் பெறப்பட வேண்டும். ஸகரியா ஸாஹிப் என்பவர் தனக்கும் அப்போதைய ஹஸரத் ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவை பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீக்கின் த'லீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். குர்'ஆணை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கபடுகின்ர த'லீம் தொகுப்பு தப்லீக் ஜமாதினருக்கு கிடைத்த புதிய வேதமாக ஆகிவிட்டது.
Subscribe to:
Posts (Atom)