Thursday, May 11, 2017

காபிர்களை விட்டு விலகுதல்



ஷெய்ஹ் ஸாலிஹ் இப்னு அப்துல் அஸீஸ் ஆலஷெய்ஹ் அவர்கள் தனது "பித்னா காலங்களில் ஒரு முஸ்லிமின் நிலை (எப்படி இருக்கவேண்டும்) குறித்து ஷரிய்யாவின் அடிப்படைகள்" என்ற நூலில் எட்டாவது அடிப்படையாக சொன்னதை முடியுமானவரை சுருக்கமாக முன்வைக்கலாம் என்று நினைக்குறேன்.

Wednesday, April 27, 2016

தப்லீக் ஜமாஅத் பற்றி அதி சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கள்

அஷ் ஷைக் ஸஃத் அல் ஹுஸைன் (ரஹிமஹுல்லாஹ்)

" தப்லீக் ஜமாஅத் அகீதா எனும் அடிப்படைக் கொள்கையில் அஷ்அரிய்யா , மற்றும் மாதுரீதிய்யாவை சார்ந்ததாகும் . அத்தோடு ( தரீக்காவாதிகளின் பிரிவுகளான) ஜிஷ்திய்யா, நக்‌ஷபந்திய்யா, காதிரிய்யா, ஸஹ்ரூர்திய்யா, சூபிய்யா போன்றவற்றையும் சார்ந்தாகும் ( பல பிரிவுகளின் கலவை )"
( ஹகீகதுத் தஃவா : 70)

Friday, January 22, 2016

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கட்டுரைக்கான பதில்


இலங்கை ஜமாத்தே இஸ்லாமி ஷீஆஇஸத்தை ஆதரிக்கிறதா? என்ற தலைப்பில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஜனவரி 2016 அல்ஹஸனாத் சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதிருந்தார். அதற்கு பதிலாக இந்த ஆக்கத்தை கருதலாம்.

Monday, January 18, 2016

பித்அத்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணத்திற்கு பிறகு மார்க்கத்தின் பெயரால் புதிதாக நுழைக்கப்பட்டவைகளையே பித்அத் என்று ஹதீஸ்கள் எமக்கு அடையாளப்படுத்துகின்றது.

இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம், அதில் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ மாற்றங்கள் செய்வதற்கோ எந்த ஒரு தேவையுமில்லை.

Friday, December 18, 2015

தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் 3 நாள், 40 நாள், 3 மாதம் என்று வெளிக்கிளம்பி த'வா செய்வது சரியா?

முதலாவது, வெளிக்கிளம்பி செல்வது சரியா பிளைய என்று புரிந்துகொள்வதற்கு முன் அதனை சரி என்று எடுத்தாலும் கூட தப்லீக் ஜமாஅத் நேரான பாதையில் இருப்பதாக ஆகிவிடாது. ஏன் என்றால் அடிப்படை கொள்கையிலையே அவர்கள் பிழைத்து விட்டார்கள், வெளிக்கிளம்பி செல்வது கொள்கைக்கு பிறகு உள்ள ஒரு அம்சம்.

Saturday, April 18, 2015

ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்களின் பிழையான அடிப்படைகள்


ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்களின் பிழையான அடிப்படை குறித்து மக்களுக்கு அறிவூட்டவும், தவ்ஹீத் வாதிகளுக்கும் ஜமாத்தே இஸ்லாமி இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்களுக்கு இடையில் எந்த வேறுபாடுமில்லை, தவ்ஹீத் வாதிகள் பிக்ஹ், சுன்னத் போன்ற விஷயங்களில் கவனம் எடுக்குறார்கள் உறுதியாக இருக்குறார்கள், ஜமாத்தே இஸ்லாமி இஹ்வானுல் முஸ்லிமீன் சார்ந்தவர்கள் பிக்ஹ், சுன்னத் போன்ற விஷயங்களில் பொருற்படுவதில்லை என்ற மக்களின் தவறான சிந்தனையை சீர்திருத்துவதுமே இவ்வாக்கத்தின் நோக்கம்.

Tuesday, April 7, 2015

கூட்டு துஅ அடிப்படையற்றதே : MT முபாரிஸ் அவர்களுக்கான பதில்

மௌலவி MT முபாரிஸ் ரஷாதி தனது முகநூல் பக்கத்தில் கூட்டு துஅ சம்பந்தமாக தனது நடுநிலமையான பார்வை எண்டு ஒரு கட்டுரையை பதிவு செய்து இருந்தார். அதில் அவர்விட்ட தவறுகளை மக்களுக்கு முன்னிலையில் சுட்டி காட்டவே இந்த பதிவு.

இமாம் சத்தம் இட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரதுல் பாதிஹா ஓதிய பிறகு பின்னால் இருப்பவர்கள் "அமீன்" சொல்லுவார்கள், இதை யாரும் மறுக்கவில்லை,

Wednesday, February 11, 2015

தப்லீக் ஜமாத்தின் தவறான அடிப்படைகள் (1)

எது மார்க்கம்?


அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் அது மார்க்கம், வேறு எவர் தன்னிஷ்டப்படி சொன்னாலும் அது மார்க்கம் ஆகாது. எனவே குரானும் நபியவர்களுடைய வழிகாட்டல் ஆன ஹதீஸும் மற்றுமே மார்க்கம்.

நபியவர்களுடைய வழிகாட்டல் இது தான் என்று அறிந்துகொள்வதற்கு வேறு சில வழிகள் இருக்கலாம்

Tuesday, December 9, 2014

ஹதீஸ்கலையில் மௌலவி பீஜே அவர்களின் தவறான அணுகுமுறை


ஸஹீஹான ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படும என்பதை பற்றி நான் விளங்கபடுத்த வரவில்லை.

நான் வைக்கும் வாதங்கள் ஏற்கனவே எமது தரப்பில் இருக்கும் அறிஞர்களால்  வைக்கப்பட்டதே. நான் அதை ஒரு தனியான பதிவில் பதிவு செய்ய காராணம், இந்த வாதம் எமது தரப்பால் வைக்கப்படும் பிரதான வாதங்களில் ஒண்டு. இந்த வாதம் பலமுறை வைக்கப்பட்டது, ஆனால் TNTJ & SLTJ தரப்பால் கணக்கெடுக்காமல் மறைப்பதற்கு முயற்சி செய்வது போன்று ஒரு சில வார்த்தைகளை சொல்லி விட்டு போகிறார்கள் என்ற காரணமும், இந்த பிரதான வாதம் மற்ற வாதங்களோடு வைக்கபடுவதால் பெரிதாக விளங்குவதில்லை என்று நினைத்தும் இதை தனியாக பதிவு செய்கிறேன்.

Friday, June 13, 2014

அல்லாஹ் எங்கே உள்ளான்?



அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் அல்லாஹ் எங்கே உள்ளான்? என்ற வினாவும், அதற்கான விடையும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இன்று அதிகமான முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றி தவறான நம்பிக்கைதான் நிலவுகின்றது. அத்வைதிகள், 'அல்லாஹ் எல்லாமாயும் எங்குமாயும் உள்ளான்' என்று கூறுகின்றனர், 'அவன் தூணிலும் துரும்பிலும் இருப்பதாக' நம்புகின்றனர். இன்னும் சில பிரிவினரும் 'அவன் எங்கிருந்தால் எங்களுக்கென்ன?' என்று கேள்வி கேட்டு இதில் அலட்சியப் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.

Monday, April 21, 2014

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் : TNTJ & SLTJ அல்லாஹ்வை புரிந்துகொள்ளவில்லை!


அல்லாஹ்வை சரியான முறையில் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டும், அல்லாஹ்வை பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) சொல்லுவதை படைப்பினங்களுக்கு ஒப்பிடாமல், எப்படி என்று சொல்லாமல்/கேட்காமல், நம்பவேண்டும், "இது மட்டும்" என்று சொல்லி ஒன்றைக்கூட மறுக்கக்கூடாது. அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவதாக நபி சொல்லி இருக்குறார்கள். அல்லாஹ் எப்படி இறங்குகிறான் என்பது தெரியாது, நிச்சியமாக அல்லாஹ்வின் இறங்குதல் படைபினங்களுக்கு ஒப்பானதல்ல. அல்லாஹ் தன் மகிமைக்கு தக்கவாறு இறங்கி வருகிறான் என்று நம்புவது கடமை.

Sunday, December 29, 2013

நபி அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புகின்றவர்கள் அநியாயக்காரர்களா?

25:8 ..... என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

இந்த வசனத்தை குறிப்பிட்டு "எனவே நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புபவர்கள் அநியாயக்காரர்கள்" என்று வாதங்கள் வைக்கிறார்கள். இந்த வாதத்தை வைக்காமல் இவர்கள் சூனியத்தை பற்றி பேசமாட்டார்கள், அந்த அளவுக்கு இந்த வாதத்தை நம்பி அதை மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். இது அவர்கள் முக்கியமாக வைக்க கூடிய வாதம் என்பதால் அதற்கு ஒரு பதிலை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

Saturday, December 21, 2013

சூனியத்தை நம்புவது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகுமா?

சூனியத்தை நம்புவது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகுமா?

TNTJ என்ற அமைப்பின் ஒரு ஆய்வின் முடிவாக சொல்லப்படும் அறிஞர் PJ உடைய இந்த ஆய்வின் ஒரு முடிவு சூனியம் என்று ஒன்று இல்லை, இன்னும் சில இடங்களில் சூனியம் என்றால் மேஜிக். இதில் எது அவர்களுடைய இறுதி நிலைபாடு என்பதை அவர்கள் தான் சொல்லவேண்டும் ......
இந்த ஆய்வை SLTJ என்ற அமைப்பு எந்த ஒரு மீல்பரிசீல்னையும் இல்லாமல், ஏன், அறிஞர் PJ செய்தது உண்மைலேயே ஒரு ஆய்வு தானா? என்று கூட பார்க்காமல் "செவிமடுத்தோம், கட்டுப்பட்டோம்" என்று செயலால் நிருபிக்கும் விதத்தில் அதை ஏற்று பின்பற்றிவருகிறார்கள், இதற்கு தக்லீத் என்று பெயர் சூட்டுவதை அவர்கள் விரும்பாத காரணத்தால் அந்த வார்த்தையை தவிர்த்து கொள்கின்றேன்.

Tuesday, October 15, 2013

கட்டுபடுதல் என்பதே வணக்கமா? : ஜமாத்தே இஸ்லாமியின் பிழையான அடிப்படை

         
   
"வணக்கத்திற்குரிய நாயகனை வணங்குவது எப்படி?" என்ற தலைப்பில் இலங்கை ஜமாத்தே இஸ்லாம் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஒரு உரையாற்றினார்கள். அந்த உரையில் அவர் சொல்லவந்த பிரதான கருத்து "கட்டுபடுதல் என்றாலே வணக்கம்" என்பதை தான். இந்த கருத்து முதலில் சொன்னவர் ஜமாத்தே இஸ்லாமியின் இஸ்தாபகர் அபுல் அ'லா மௌலான மௌதூதி அவர்கள் தான்.

Saturday, October 12, 2013

யார் இந்த ஷீஆக்கள்?


     
         அப்துல்லாஹ் பின் பா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீஆஇஸ்மாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள் பின்னர் தமது அரசியல் சிந்தனைக்குளுக்கெல்லாம் மதச் சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகி சென்றுவிட்டனர்.

நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஆட்சி தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷீஆக்கள் தமது தவறான சிந்தனைகளை எல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்