அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் அல்லாஹ் எங்கே உள்ளான்? என்ற வினாவும், அதற்கான விடையும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இன்று அதிகமான முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றி தவறான நம்பிக்கைதான் நிலவுகின்றது. அத்வைதிகள், 'அல்லாஹ் எல்லாமாயும் எங்குமாயும் உள்ளான்' என்று கூறுகின்றனர், 'அவன் தூணிலும் துரும்பிலும் இருப்பதாக' நம்புகின்றனர். இன்னும் சில பிரிவினரும் 'அவன் எங்கிருந்தால் எங்களுக்கென்ன?' என்று கேள்வி கேட்டு இதில் அலட்சியப் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.