Wednesday, April 27, 2016

தப்லீக் ஜமாஅத் பற்றி அதி சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கள்

அஷ் ஷைக் ஸஃத் அல் ஹுஸைன் (ரஹிமஹுல்லாஹ்)

" தப்லீக் ஜமாஅத் அகீதா எனும் அடிப்படைக் கொள்கையில் அஷ்அரிய்யா , மற்றும் மாதுரீதிய்யாவை சார்ந்ததாகும் . அத்தோடு ( தரீக்காவாதிகளின் பிரிவுகளான) ஜிஷ்திய்யா, நக்‌ஷபந்திய்யா, காதிரிய்யா, ஸஹ்ரூர்திய்யா, சூபிய்யா போன்றவற்றையும் சார்ந்தாகும் ( பல பிரிவுகளின் கலவை )"
( ஹகீகதுத் தஃவா : 70)


இமாம் அல் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்)


" தப்லீக் ஜமாஅத்தினர் என்போர் தற்கால சூபித்துவ வாதிகள்."
( அல் ஹுதா வன் நூர் : 715)


அல்லாமா ஹமூத் அத் துவைஜிரீ (ரஹிமஹுல்லாஹ்)


" யார் ஒருவர், தப்லீக் ஜமாஅத்தினர் , பித்அத் எனும் மார்க்கத்தில் இல்லாதவற்றை நடைமுறைப்படுத்தும் கூட்டம் என்று தெரிந்திருந்தும் அவர்களைப் புகழ்வாரோ அவர் அவர்களைச் சார்ந்தவராவார் "
( அல் கௌலுல் முபீத் : 213)


அஷ்ஷைக் ஹம்மாத் அல் அன்ஸாரி (ரஹிமஹுல்லாஹ்) 


" யாரெல்லாம் அஹ்லுஸ் ஸுன்னா எனும் நேர்வழியில் செல்லும் கூட்டத்திற்கு மாற்றமான சிந்தனையில் இருக்கின்றனரோ அவர்கள் அந்த அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்தவர்கள் அல்லர் , சகோதரத்துவ இயக்கமும் , தப்லீக் ஜமாஅத்தும் அஹ்லுஸ் ஸுன்னாவில் உள்ளவர்கள் அல்லர் "
( அல் மஜ்மூஉ : 2/763)


அஷ் ஷைக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலுஷ்ஷைக் 


" தப்லீக் ஜமாஅத் , வழிகேடு , பித்அத் எனும் மார்க்கத்தில் இல்லாதவற்றை நடைமுறைப் படுத்துதல் , மற்றும் இணை வைப்பு , கப்ருகளை வணங்குதல் என்பனவற்றின் பால் அழைப்பு விடுத்தல் போன்ற அபத்தங்களை உள்ளடக்கிய ஒரு ஜமாஅத் "
( அல் பதாவா : 1/267)


அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான்


"தப்லீக் ஜமாஅத், பாவிகளை பாவத்திலிருந்து ( விடுதலையாக்கி ) பித்அத் எனும் மார்க்கத்தில் இல்லாத அனுஷ்டானங்களின் பால் இட்டுச் செல்கின்றனர் .
மார்க்கத்தில் இல்லாதவற்றை செய்வது (பித்அத்) பாவத்தை விட மிக மோசமானதாகும்.
அஹ்லுஸ் ஸுன்னா எனும் நேர்வழியில் செல்லக்கூடிய கூட்டத்தாரில் இருக்கும் பாவி, பித்அத் எனும் இல்லாதவற்றை மார்க்கத்தில் உட்புகுத்தும் கூட்டத்தாரில் இருக்கும் வணக்கம் செலுத்தும் அடியானை விட எவ்வளவோ சிறந்தவன் ,மேலானவன் ஆவான்".
(இத்திஹாபுல் காரி : 185/2)

அல்லாமா முக்பில் அல் வாதிஈ (ரஹிமஹுல்லாஹ்) 


" நாம் உறுதி கொள்ளும் விடயம் யாதெனில் : நச்சயமாக இஹ்வானுல் முஸ்லிமீன்களும் தப்லீக் ஜமாஅத்தினரும் மார்க்கத்தில் இல்லாதவற்றை செய்யும் பித்அத் வாதிகளாவர்."
( இஜாபதுஸ் ஸாஇல் : 328)


இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)


" தப்லீக் ஜமாஅத்தினருக்கு அகீதா எனும் அடிப்படைக் கொள்கை விவகாரங்களில் போதிய தெளிவு இல்லை."
( மஜ்மூஉ பதாவாஷ் ஷைக் இப்னு பாஸ் : 8/331)


 அல்லாமா முக்பில் இப்னுல் வாதிஈ (ரஹிமஹுல்லாஹ்)


" அபூ ஜஹ்லின் காலத்தில் இவர்களது அழைப்புப் பணி இருந்திருந்தால் அவன் இவர்களை மறுக்கமாட்டான் "
( துஹ்பதுல் முஜீப் : 68)


அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான்


" பொதுமக்களுக்கும் ஏனையோருக்கும் எனது உபதேசம் என்னவெனில் அவர்களுடன் சேராமல் இருப்பதாகும்."
( அல் அஜ்விபதுல் முபீதா : பக் 106)


 அல்லாமா ஹமூத் அத் துவைஜிரீ (ரஹிமஹுல்லாஹ்)


" அல்லாஹ்வின் படைப்பினங்களை விட்டும் அவன் உயர்வானவன் என்பதை மறுக்கக்கூடிய, மற்றும் அவன் அனைத்து இடங்களிலும் இருக்கின்றான் என்று எண்ணும் தப்லீக் ஜமாஅத்தினரோடு இணைவதிலிருந்து தனக்கு உண்மையாக உபதேசிக்கும் ஒரு முஃமின் தவிர்ந்து கொள்ளட்டும் ( எச்சரிக்கையாக இருக்கட்டும் )."
( அல் கௌலுல் பலீக் : 44)


அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான்


" தப்லீக் ஜமாஅத்தினர் ஓரிறைக் கொள்கையில் துறவறத்தைக் கடைப்பிடிப்பவர்கள் , அத்தோடு அவர்கள் ஓரிறைக் கொள்கை பற்றி பேசுவோரை விட்டும் விரண்டோடுபவர்கள் , என்பவை நான் ( அக்கூட்டத்தினரிடத்தில் ) சுயமாக கண்ட விடயங்களாகும் "
( அல் அஜ்விபதுல் முபீதா : 234)

-----------------
தமிழாக்கம் : அ(z)ஸ்ஹான் ஹனீபா 

No comments:

Post a Comment