Saturday, October 12, 2013

யார் இந்த ஷீஆக்கள்?


     
         அப்துல்லாஹ் பின் பா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீஆஇஸ்மாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள் பின்னர் தமது அரசியல் சிந்தனைக்குளுக்கெல்லாம் மதச் சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகி சென்றுவிட்டனர்.

நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஆட்சி தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷீஆக்கள் தமது தவறான சிந்தனைகளை எல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்

"நபியவர்களுக்கு பின்னர் அலி (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என அல்லாஹ் குர்'ஆணிலும் கூறியிருக்கிறான். இவர்கள் (சஹாபாக்கள்) அந்த ஆயத்துகளை நீக்கிவிட்டன. அபூபக்ர், உமர், உஸ்மான் ஆகிய மூவரும் அலி அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். அதற்கு ஏனைய சஹாபாக்கள் அனைவரும் உடந்தையாக இருந்தனர். எனவே நபித்தோழர்கள் அனைவரும் காபிராகிவிட்டனர்" என்று அவர்கள் கூறினார்.

இவ்வாறு இஸ்லாத்தில் இல்லாத இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பல கருத்துக்களை கொண்டவர்கள்தான் ஷீஆக்களாவர். எல்லா வகையான வழிகேடுகளும் இந்த ஷீஆக்களிடம் குடிகொண்டுள்ளன.


குர்'ஆன் மாற்றப்பட்டுவிட்டது

நபி தோழர்கள் குர்'ஆணை மாற்றிவிட்டனர் என்பது ஷீஆக்களின் நம்பிக்கையாகும்.
"நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட ஆயதுகளின் எண்ணிக்கை 17000 ஆகும். எம்முடைய கைகளில் இருக்கும் குர்'ஆன் 6000 ஆயத்துகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்." (அல்காபீ 2/634) 
உண்மையான முழுக் குர்'ஆணும் தமது இமாம்களிடம் இருப்பதாகவும் நம்புகின்றனர்.


ஹதீஸ் தொடர்பில் இவர்களது நம்பிக்கை

நாம் ஹதீஸ் என நம்புவதை அவர்கள் ஹதீஸ் என நம்புவதில்லை. தாம் நம்பக்கூடிய தமது இமாம்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் செய்திகளையே இவர்கள் ஹதீஸ் என்று கூறுகின்றனர். ஆரம்ப காலத்திலிருந்தே ஷீஆக்கள் போலி ஹதீஸ்களை இட்டுக் கட்டுவதில் விற்பனர்களாக திகழ்ந்தனர். தமக்கு தேவையானதை ஹதீஸ் என்ற பெயரில் புனைந்து அதற்கு அறிவிப்பாளர் தொடர்களையும் உண்டாக்கிவிடுவர்.


ஸஹாபாக்கள் 

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் திருபொருத்தம் பெற்றவர்கள். சுவனவாசிகள் என சுபசோபனம் சொல்லப்பட்டுள்ளனர். பை'அதர் ரில்வானில் பங்கு கொண்ட 1400 ஹாபாக்களும் நரகம் செல்லமாட்டார்கள் என நபி (ஸல்லல்லாஹு  அலைஹி வஸ்ஸல்லம் ) அவர்கள் கூருகினார்கள்.
"முஹாஜிர்களை அன்சார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களுக்கு சுவனம் தயார் பன்னபட்டுள்ளது" என குர்'ஆன் கூறுகின்றது. "பத்ர் ஹாபாக்கள் சுவனவாசிகள்" என்றெல்லாம் ஹதீஸ் கூறுகின்றது.

ஆனால்  ஷீஆக்களோ சுமார் 17 பேர்களை தவிர ஏனைய  ஸஹாபாக்கள்  நரகவாசிகள் என்று கூறுகின்றனர்.
அபூபக்ர் அவர்கள் ஷைத்தானின் கொம்பு என்றும் அவரும் அவரது தோழர் உமரும் முனாபிக்குகள், பொய்யர்கள், அநியாயக்காரர்கள். இவர்கள் இருவரினது இமாமத்த்தை யார் ஏற்று கொண்டார்களோ அவர்கள் ஜாஹிளிய்யத்தினதும், வழிகேட்டினதும் மரணத்தையே அடைவர், என்றும், உமர் அவர்கள் சிஹாக் எனும் விபச்சாரிக்குப் பிறந்தவர் என்றும் கூறுகின்றனர். (அத்தராயிப் பீ ம'ரிபதித் தவாயிப்) 

உஸ்மான் (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் சபிக்கப்பட்டவர் பாதிலில் இருந்தார் என "தீகதுஷ் ஷீஆ" என்ற நூல் கூறுகின்றது. "தும்ம இஹ்ததைத்து" என்ற நூலிலும்  "அஷ்ஷீஆ ஹும் அஹ்ளுச்சுன்னாஹ்" என்ற நூலிலும் நம்மிடம் நடைமுறையில் உள்ள ஹதீஸ்களை தப்பும், தவறுமாக விலக்கி முன்னைய மூன்று குலபாக்களையும் காபிர்கள் எனக்கூறும் விதத்தில் எழுதபட்டுலமை குறிபிடத்தக்கது.


தனி மனித வழிபாடு 

தனி மனித வழிபாட்டின் மொத்த வடிவமாக ஷீஆஇஸ்ம் உள்ளது. அலி (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த மதமே நிறுவப்பட்டுள்ளது. அலி (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்களையும் தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான் இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது. இவர்களில் சிலர் அலி (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்களை அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர். இவர்களது ஒரு பாடலில் "லா இலாஹ இல்லஸ் சஹாரா" - பாத்திமாவை தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.

தமது 12 இமாம்களும் மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்றும் நம்புகின்றனர். தமது இமாம்களுக்கு தூதர்களோ, மலக்குகளோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.


கபுர் வழிபாடு

முஸ்லிம் சமூகத்திற்குள் கப்ரு வழிபாட்டை நுழைத்ததில் இவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஹஜ்ஜுக்கு வந்தாலும் இவர்கள் கப்ருகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதை காணலாம்.

ஹுஸைன் (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்களது கப்ரை சியாரத் செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர் போலாவார் என்றும் இன்றுவரைக்கும் பிரச்சாரம் செய்கின்றனர். கபுர்களுக்கு செல்லும் போது தவந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.

கர்பலா பூமி, மக்கா, மதீனா, பாலஸ்தீனத்தை விட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர். தமது உடம்புகளில் காயத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். "யா ஹுஸைன்! யா ஹுஸைன்!" என்றும் ஒப்பாரி வைக்கின்றனர்.


தகிய்யா

பொய் பேசுதல், உள்ளொன்று வைத்து வெளியில் அதற்கு மாற்றமாக வேஷம் போடுதல் என்பது இதன் அர்த்தமாகும்.

இவர்கள் அபூபக்ர் (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்களை காபிர் என்று கூறுவார்கள். ஆனால் அலி (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் அபூபக்ர் (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்களை மதித்து நடந்துள்ளார்கள். உமர் (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்களை காபிர் என்பார்கள், ஆனால் அலி (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் தனது மகள் உம்மு குல்தூமை உமர் (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்களுக்கு மணமுடித்து கொடுத்தார்கள். இந்த முரண்பாட்டை நீக்குவதற்காக இந்த "தகிய்யா" கோட்பாட்டை உருவாகினார்கள்.

உள்ளொன்று வைத்து அதற்கு புறம்பாக நடப்பது மார்க்க கடமை. அந்த அடிப்படையில்தான் அலி (ரலி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றும் கூறுவர். இன்றும் இவர்களது எல்லா வழிகேடுகளையும் இதை வைத்தே பாமர மக்களிடம் மூட்டி மறைத்து வருகின்றனர்.
"தகிய்யா (என்ற நயவஞ்சகத்தனம்) இல்லாதவனுக்கு மார்க்கமே இல்லை"  உசூலுல் காபி 2/217.213 என்றெல்லாம் அடிப்படைகள் தொகுத்து இருக்கிறார்கள்.

நாம் இந்த கட்டுரையில் சுட்டி காட்டியிருக்கும் அவர்களுடைய வழிகேடான,  இஸ்லாத்தை விட்டு வெளியேற்றகூடிய கருத்துகளையும் நம்பிக்கைகளையும் செயல்களையும்  அவர்கள் பொது மக்களிடம்  மூடி மறைக்க கூடும் என்பதாலையே அவர்களுடைய புத்தகங்களில் இருந்தே ஆதாராம் காட்டியுள்ளோம்.


முத்அ எனும் தற்காலிக திருமணத்தை தங்களது அடிப்படைகளில் ஒன்றாக எடுத்திருக்கிறார்கள். ஆண்கள் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கணவன் மனைவியாக இருப்பதை குறிக்கும். உணமியில் அது ஒரு விபச்சாரம். முத்அ செய்யாதவன் ஷீஆவே அல்ல என்றெல்லாம் அடிப்படைகள் வகுத்து, திருமணம் முடித்தவர் முடிக்காதவர்கள் எல்லோரும் இந்த விபச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு ஷீஆக்களிடம் இல்லாத வழிகேடே இல்லை எனலாம்.
ஷீஆஇஸ்ம் பரவுகின்ற பகுதிகளில் பரவலாக வன்முறைகள். குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதையும் காணலாம்.அஹ்லுஸ் சுன்னாஹ் மக்களை கொள்ளுவது அல்லாஹ்விடத்தில் நன்மை தரக்கூடிய விஷயமாக நம்புகிறார்கள். அது நாள்தான் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் சுன்னிகள் கொலை செய்யபடுகிறார்கள். குறிப்பாக சிரியாவில் இன்றும் (2011 - 2015) சுன்னிகள் கொலை செய்யபடுகிறார்கள்.

இந்த சீரழிந்த சிந்தனைகளை இலங்கையிலும் பரப்புவதற்கு பெருத்த முயற்சிகள் முன்னேடுக்கபடுகின்றன. இன்றைய அரசியல் உலகில் ஈரான் ஒரு ஹீரோவாகப் பார்க்கப்படுவதால் சிலர் ஷீஆஇஸத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் பலரும் அவர்களது பிரச்சார முயற்சிகளுக்கு பலியாகி  ஷீஆஇஸத்தை ஒரு மதுஹபு போன்று, சாதாரண ஒரு இயக்கம் போன்று பார்கின்றனர். இது தவறாகும்  ஷீஆஇஸ்ம் என்பது இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒரு மதமாகும். அவர்கள் நம்பும் குர்'ஆன் வேறு, அவர்கள் நம்பும் ஹதீஸ் வேறு, அவர்களது அகீதா வேறு, அவர்கள் முன்வைக்கும் ஈமானிய அம்சங்கள் வேறு, எனவே இவர்களது பிரச்சாரம் குறித்து விழிப்பாக இருப்பது அவசியாகும்.

அல்லாஹ்வால் புகழப்பட்ட ஹாபாக்களைத் தூற்றுபவர்களுடன்,  நபியவர்களின் மனைவியர்கலான ஆயிஷா (ரலி அல்லாஹு அன்ஹா ), ஹப்ஸா (ரலி அல்லாஹு அன்ஹா) ஆகியோரை கேவலபடுத்துபவர்களுடன் நற்புரவுக்கோ அல்லது சமரசதிற்கோ அறவே இடமில்லை.

இன்றைய ஷீஆக்கள் காபிர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என பல அறிஞர்கள் மார்க்க தீர்ப்பு வழங்கி இருப்பதையும் இவர்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செயல்படுபவர்கள் என்பதையும் பொது மக்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment